Advertisment

வயநாடு நிலச்சரிவு: நிவாரண நிதி வழங்கிய கமல்ஹாசன், சூர்யா ஜோதிகா!

வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு நடிகர் கமல்ஹாசன், சூர்யா ஜோதிகா உள்ளிட்ட பலர் நிவாரணநீதி வழங்கியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Kamal haasan surya jyothika

வயநாடு நிலச்சரிவுக்கு கமல்ஹாசன், சூர்யா, ஜோதிகா உதவி

வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு தென்னிந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து நடிகர்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

Advertisment

கேரளா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பருவழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல பகுதிகளில் அதிதீவிர கனமழை பெற்று வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலையில், வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மலைகள் இருக்கும் பகுதியில், பாறைகள் சாலையில் விழுந்துள்ளதால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு, கேரளாவில் முக்கிய பகுதிகளில் ஒன்றாக இருக்கும் வயநாடு பகுதியில், நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் தென்னிந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமடைந்து வருகிறது. பலி எண்ணிக்கை 300-ஐ நெருங்கி வரும் நிலையில், இந்த நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட பலர் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளும் நிவாரண பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வயநாடு பகுதியில் மீட்பு பணிக்காக, தமிழக அரசின் சார்பில் ஒரு குழு சென்றுள்ள நிலையில், நிவாரண பணிக்காக தமிழக அரசின் சார்பில், 5 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் எ.வ.வேலு இந்த நிதியை கேரளா முதல்வர் பிணராயி விஜயனிடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து வயநாடு பகுதியில் மேப்பாடி பகுதியில் தமிழக அரசின் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உணவு, மருத்துவ வசதி ஆடைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசை போல் அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் என பலரும் தங்களது நிவாரண நிதியை கேரளாவுக்கு வழங்கி வருகின்றனனர். அந்த வகையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், வயநாடு நிவாரண பணிக்காக ரூ25 லட்சம் வழங்கியுள்ளார். அதேபோல் தங்களர் அகரம் பவுண்டேஷன் மூலம் நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் கார்த்தி ஆகிய மூவரும் இணைந்து ரூ50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். மேலும் நடிகர் விக்ரம் ரூ20 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

அதேபோல் கேரளாவை சேர்ந்த நடிகர் பகத் பாசில் நஸ்ரியா தம்பதி ரூ25 லட்சமும், மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக மம்முட்டி ரூ20 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Wayanad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment