எடப்பாடி பழனிசாமி கூட்டத்தை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : புகழேந்தி பேச்சு

திருச்சியில் நடைபெற்ற மாநாட்டை கண்டு பொறுக்கமுடியாமல் பணம்கொடுத்து, எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் மாநாடு நடத்துகிறார்.

திருச்சியில் நடைபெற்ற மாநாட்டை கண்டு பொறுக்கமுடியாமல் பணம்கொடுத்து, எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் மாநாடு நடத்துகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pugazhenthi

அதிமுக ஒபிஎஸ் அணி புகழேந்தி

சென்னையில் வரும் 20-ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகும். கூட்டணி மற்றும் பிரச்சாரம் குறித்த அறிவிப்பினையும் ஓ.பி.எஸ் வெளியிடுவார் என ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச்செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Advertisment

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ஓபிஎஸ் தலைமையில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டை கண்டு பொறுக்கமுடியாமல் பணம்கொடுத்து, எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் மாநாடு நடத்துகிறார். ஓபிஎஸ் தலைமையில் அமையும் கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி குறித்து பல்வேறு கட்சியினரும் ஓபிஎஸ்சிடம் பேசி வருகின்றனர். பாஜக முடிவு குறித்து எங்களுக்கு கவலை இல்லை.

தமிழகத்தில் கட்அவுட் டீமாக எடப்பாடி பழனிச்சாமி அணி செயல்படுகிறது. மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்காக காவல்துறை அனுமதி பெறாமல், நீதிமன்ற உத்தரவை மீறி மாநிலம் முழுவதும் கட்அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக டிஜிபியிடம் புகார் தெரிவிக்க உள்ளோம். மணிப்பூர் கலவரத்தை திசை திருப்பவே சட்டப் பேரவையில் ஜெயலலிதா அவமதிக்கப்பட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

மறைந்த தலைவர்கள் குறித்து பேசுவதை நிறுத்த வேண்டும். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடுதான் காரணமாக அமைந்தது. தென் மாவட்ட மக்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தை மன்னிக்க மாட்டார்கள். தைரியம் இருந்தால் எடப்பாடி பழனிசாமி தென்பகுதிக்கு போகவேண்டும். தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள்.

Advertisment
Advertisements

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு எந்த முடிவு எடுத்தாலும், அதற்கு ஆதரவாக செயல்படுவோம். திமுகவின் 39 எம்பிக்களும் நாடாளுமன்றம் நடக்கவிடாமல் முடக்க வேண்டும். தமிழகத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜவிற்கு இடையே தகராறு எதுவுமில்லை. ஆளுநர் ஆளுநராகவே செயல்பட வேண்டும் அதை விட்டுவிட்டு தினந்தோறும் ஆளுநருக்கும் ஆளுங்கட்சிக்கும் சண்டை நடந்து கொண்டிருப்பது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கின்றது. ஏதாவது ஒரு பிரச்சினையை ஆளுனர் தினமும் கொண்டு வருகிறார்.

அதிமுக தலைமை அலுவலக வழக்கு நிலுவையில் இருப்பதால் மட்டுமே அதிமுக தலைமை கழக அலுவலகத்திற்கு செல்லாமல் இருக்கிறோம். விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

க.சண்முகவடிவேல்

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: