கோவையில் யானை தாக்கி பீகார் தொழிலாளி படுகாயம் : ரத்தம் கொடுத்து காப்பாற்றிய வனத்துறை ஊழியர்

கோவையில் மருதமலை வனப் பகுதியை ஒட்டி உள்ள பாரதியார் பல்கலைக் கழக வளாகம், அண்ணா பல்கலைக் கழக வளாகம் மற்றும் சட்டக் கல்லூரி பகுதியில் இந்த யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன.

கோவையில் மருதமலை வனப் பகுதியை ஒட்டி உள்ள பாரதியார் பல்கலைக் கழக வளாகம், அண்ணா பல்கலைக் கழக வளாகம் மற்றும் சட்டக் கல்லூரி பகுதியில் இந்த யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன.

author-image
WebDesk
New Update
Elephant

யானை தாக்குதல்

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள ஆனைகட்டி, தடாகம், மருதமலை பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வனத்தில் இருந்து வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

Advertisment

குறிப்பாக மருதமலை வனப் பகுதியை ஒட்டி உள்ள பாரதியார் பல்கலைக் கழக வளாகம், அண்ணா பல்கலைக் கழக வளாகம் மற்றும்  சட்டக் கல்லூரி பகுதியில் இந்த யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் வனப்பகுதி ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அவசியமின்றி இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று விறகு சேகரிக்கவும் இயற்கை உபாதைகளுக்காக வனப் பகுதிகளுக்கு செல்லக் கூடாது என்றும் வளத் துறையினர் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டிடப் பணியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் ஷா என்ற தொழிலாளி அதிகாலை 5.30 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்று உள்ளார்.

அப்பொழுது புதர் மறைவில் இருந்த ஒற்றை காட்டு யானை திடீரென மனோஜ்"ஷாவை தாக்கியது. யானை தந்ததால் குத்தி தாக்கி வீசியதில் அவர் வயிறு குடல் சரிந்து மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அலறிய மனோஜ்"ஷாவின் சத்தம் கேட்டு அருகில் இருந்த தொழிலாளர்கள் அங்கு வந்து சத்தம் எழுப்பி யானையை விரட்டினர்.

Advertisment
Advertisements
publive-image

இது குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து உடனடியாக அங்கு வந்த வனத்துறையினர் மனோஜ்"ஷாவை மீட்டு மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதி அளித்தனர்.  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிறு பகுதியில் யானைத் தந்தம் குத்தியதில் வயிறு கிழிந்து குடல் வெளியேறி இருப்பதையும் மார்பு பகுதியில் ரத்தம் உறைந்து இருப்பதையும் கண்டறிந்தனர்.  பின்னர் அவரை அவசர சிகிச்சை பிரிவியில் அனுமதித்தனர்.

இந்நிலையில் மனோஜ்"ஷாவுக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்ட நிலையில் அவருக்கு ("o +") வகை ரத்தம் உடனடியாக தேவைப்பட்டது. இது குறித்து வனத்துறையினருக்கு மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் ரத்த தானம் செய்ய யாராவது இருக்கிறார்களா என அனைவரும் தேடிவந்தனர். அப்பொழுது அங்கிருந்த வனத்துறை தற்காலிக பணியாளரான பிரபாகர் என்பவர்உடனடியாக மனோஜ் ஷாவிற்கு ரத்தம் கொடுத்து உதவினார்.  இதை அடுத்து காட்டு யானை தாக்கி காயமடைந்த பீகார் தொழிலாளிக்கு மருத்துவர்கள் சிகிச்சையை தொடங்கினர்.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: