சட்டை துரைமுருகன் வழக்கை முடிக்க பார்க்கிறார் ஆனால் சீமான் வழக்கை மீண்டும் என்மீது வழக்கு போட்டு என்னை துன்புறுத்த பார்க்கிறார் என்று நடிகை விஜயலட்சுமி தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். இந்த புகார் காரணமாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த புகார் தொடர்பாக சீமானுக்கு காவல்துறை சார்பில் 2 முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், விசாரணை நடைபெற்ற நிலையில், அவர் ஆஜராகவில்லை.
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீதான தனது புகாரை வாபஸ் பெற்றிருந்தார். மேலும் தோல்வியை ஒப்புக்கொண்டு தான் இந்த புகாரை வாபஸ் பெற்றதாகவும், தான் மீண்டும் பெங்களூருவுக்கே திரும்ப சென்றுவிடுவதாகவும் நடிகை விஜயலட்சுமி கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த நாளே ஒரு புதிய வீடியோவை வெளியிட்ட விஜயலட்சுமி தற்போது மீண்டும் ஒரு வீடியோ பதிவில் பேசியுள்ளார்.
செப்டம்பர் 15-ந் தேதி சாட்டை துரைமுருகன் என்னை சந்தித்து எல்லாவற்றையும் சமாதானமாக முடித்துவிடலாம் என்று கூறி வழக்கை வாபஸ் பெற சொல்லிவிட்டு எங்களை பெங்களூர் அனுப்பி வைத்துவிட்டார். சாட்டை துரைமுருகன் அப்போது சொன்னதுக்கும், அதன்பிறகு சீமான் பேசியதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. சாட்டை துரைமுருகன் இந்த வழக்கை முடிக்க பார்க்கிறார். ஆனால் சீமான் என்மீது வழக்கு தொடர்ந்து இந்த பிரச்சனையை மீண்டும் வளர்க்க நினைக்கிறார்.
நீங்கள் மானநஷ்ட வழக்கு போடாமல் இருப்பீர்கள் என்று உத்தரவாதம் கொடுத்தால் தான் இந்த வழக்கை கோர்ட் மூலமாக தீர்க்க நான் யோசிப்பேன். இந்த வழக்கு இன்னும் முறையாக தீர்க்கப்படவில்லை. சாட்டை துரைமுருகன் என்னிடம் பேசிய ரெக்கார்ட்ஸ் வைத்து பார்க்கும்போது இந்த பிரச்சனையை தீர்ப்பது போன்ற நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் சீமான் இதற்கு உடன்பட்ட மாதிரி தெரியவில்லை. சாட்டை துரைமுருகனிடம் தானே பேசுனீங்க என்னிடம் பேசிவில்லையே என்று சீமான் சொன்னார் என்றால் இது வேறமாதிரி போய் முடியும்.
அதனால் இந்த வழக்கை முடிக்க நான் கன்சர்ட் கொடுக்கவில்லை. தயவு செய்து இந்த வழக்கை கோர்ட் மூலமாக முடிப்பதற்கு மீடியா உள்ளிட்ட யாரும் தமிழ்நாட்டில் உள்ள பெரியவர்கள் யாரும் ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகை விஜயலட்சுமி பேசியுள்ளார். புகாரை வாபஸ் பெற்றவுடன் இந்த வழக்கு முடிந்துவிட்டதாக கருதிய பலருக்கும் அடுத்தடுத்து வெளியாகும் வீடியோவால் பெரும் பரபரப்புக்குள்ளாகியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“