இன்று மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாள் என்பதால், தமிழ் மொழிக் காவலர்களின் உருவப் படங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
1938ஆம் ஆண்டு முதல் 1965ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு தமிழ் மொழிக்காக தன் உயிரை தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினமானது ஜனவரி 25ம் தேதியான இன்று அனுசரிக்கப்படுகின்றது.

இன்று தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாகிகளின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சுவாமிநாதன், சென்னை மேயர் பிரியா மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் மொழிப்போர் மற்றும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார்.