காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு: திருச்சி சிவா மீது கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் த.மா.கா புகார்

தி.மு.க எம்.பி திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

தி.மு.க எம்.பி திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

author-image
WebDesk
New Update
tmc yuvaraj 2

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் யுவராஜ் தலைமையில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் பத்திற்கும் மேற்பட்டவர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அண்மையில் தி.மு.க எம்.பி திருச்சி சிவா காமராஜர்  குறித்து பேசியது  சர்ச்சையை கிளப்பியது. இதைத் தொடர்ந்து, தி.மு.க எம்.பி திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். 

Advertisment

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் யுவராஜ் தலைமையில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் பத்திற்கும் மேற்பட்டவர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

 

TMC yuvaraj
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் யுவராஜ்
Advertisment
Advertisements

இது குறித்து பேட்டியளித்த யுவராஜ், “திருச்சி சிவா கூறிய கருத்தை அவரது கருத்தாக பார்க்க முடியாது” என்றும்  “தி.மு.க-வின் கருத்தாகவே பார்க்க முடியும்” எனவும் தெரிவித்தார். 

மேலும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய யுவராஜ், காமராஜர் என்பவர் உணர்வு என்றும் அவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திருச்சி சிவா பேசிருக்கும் நிலையில கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அன்றைய தினமே விட்டுவிட வேண்டும் என பேசுவது ஏற்புடையதல்ல என கூறினார். 

தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சிகள் யாரும் மக்களுக்கான பிரச்னைகள் குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிப்பதில்லை என்று யுவராஜ் விமர்சித்தார்.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: