Advertisment

எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தது ஏன்? த.மா.கா இளைஞரணி தலைவர் யுவராஜா விளக்கம்

பா.ஜ.க உடன் கூட்டணி என ஜி.கே வாசன் அறிவித்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் யுவராஜா; சந்திப்புக்கான காரணம் குறித்து விளக்கம்

author-image
WebDesk
New Update
Yuvaraja TMC

பா.ஜ.க உடன் கூட்டணி என ஜி.கே வாசன் அறிவித்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் யுவராஜா; சந்திப்புக்கான காரணம் குறித்து விளக்கம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பா.ஜ.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் அறிவித்த நிலையில், அக்கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சந்திப்பு குறித்து யுவராஜா விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதில் பா.ஜ.க மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இடையே நேற்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. த.மா.கா. தலைவர் ஜி.கே வாசனை பா.ஜ.க தேர்தல் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து, தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.,வுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்து செயல்பட உள்ளது. பிரதமர் மோடியை வேட்பாளராக கொண்ட பா.ஜ.க.வில் அங்கம் வகிக்க த.மா.கா. முடிவு செய்துள்ளது என தெரிவித்தார்.

த.மா.கா. - பா.ஜ.க. கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவராக உள்ள யுவராஜா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பு குறித்து யுவராஜா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக யுவராக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

”கடந்த 2019 -ம் ஆண்டு முதல் த.மா.கா. கட்சி அ.தி.மு.க. கூட்டணியோடு இணைந்து பல தேர்தல்கள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்தோம், அதற்கு மேலாக நல்ல நட்போடு அரசியல் பணியாற்றி வந்தோம்.

தலைவர் ஜி.கே.வாசன் பா.ஜ.க.,வுடன் கூட்டணி என்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிவித்துள்ளார்கள். பெருந்தலைவர் காமராசர், மக்கள் தலைவர் மூப்பனார் வழியில் அரசியல் பயின்றவன் என்ற காரணத்தினால் நான் மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றியைத் தெரிவித்துவிட்டு வந்துள்ளேன்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Admk Eps Gk Vasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment