Ilayaraja Compare Modi With Ambedkar : புளுக்ராப்ட் என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ள அம்பேத்கர் அன்ட் மோடி என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதியுள்ள இசைஞானி இளையாராஜா பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் வளர்ச்சி பயணமும், டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்களும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளியை ஆராய இந்த நூல் உதவும் என்று கூறியுள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளையராஜா எழுதியுள்ள இந்த முன்னுரையில், டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் தனது அறிவுத்திறன் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான போரினால் சமூகத்தில் நினைவுகூறப்படும் ஒரு மாபெரும் மனிதர். அவரது பணியின் மகத்துவம் நமது அரசியலமைப்பின் மூலம் அவர் நம் அனைவருக்கும் உறுதி செய்திருக்கும் உரிமைகள் நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.
எல்லா சவால்களையும் கடந்து வெற்றி பெற விரும்பும் பலருக்கும் அவர் ஒரு உத்வேகம். சில வரலாற்று ஆளுமைகள் தங்கள் வாழ்நாளில், பெருமை பெறுகின்றனர். ஆனால் சிலர் விரைவில் மறக்கப்படுகிறார்கள். வேறு சிலர் தங்கள் வாழும் காலத்தில் பெரி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஆனால், ‘டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்’ ஒரு அரிய தலைவர், அவர் தனது காலத்திலேயே சரித்திரம் படைத்தார், அவர் மறைந்து பல தசாப்தங்களுக்குப் பிறகும் அவரது வாழ்க்கை பரவலாக வாசிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன், ‘டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் நீர் மற்றும் ஆற்று வழிப்பாதை கொள்கையின் சிற்பி’ என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார்.
நீர் மற்றும் பாசனம் தொடர்பான சில முக்கிய நிறுவனங்களை உருவாக்குவதில் அம்பேத்கர் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பதை அறிந்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 2016இல் முதலீட்டு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் இருந்தே இதைப் பற்றி தெரிந்துகொண்டது சிறப்பானது.
இருப்பினும், ஒருவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரைப் பற்றி அதிகம் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அவரது கொள்கைகளை உள்வாங்குவதும், அவரது யோசனைகளை செயல்படுத்துபவர்களை ஊக்குவிப்பதும் அதைவிட முக்கியம். ஒருவரது கற்பனைக்கு வரம்புகள் இல்லை என்றாலும், செயல்படுத்துவதில் பல தடைகள் உள்ளன, மக்களுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்பும் ஆர்வமும் கொண்ட ஒரு உண்மையான தலைவர் மட்டுமே, தனது அடையாளத்தை விட்டுவிட்டு, தீர்க்கரீதியாகவும் கவனமாகவும் செயல்படுவதை உறுதி செய்ய முடியும்.
இந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணமும், டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்களும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளியை ஆராய இந்த நூல் முயற்சிக்கிறது.
தொழில்மயமாக்கலைப் பொறுத்தவரை, பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ கொள்கை பல சாதனைகளை செய்துள்ளது. குறிப்பாக மொபைல் தயாரிப்பு. சாலைகள், இரயில்கள், அதிவேக நெடுஞ்சாலைகள், மெட்ரோக்கள் போன்ற உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்காக இந்தியாவும் நன்கு அறியப்படுகிறது.
சமூக நீதி என்று வரும்போது, பல சட்டங்கள், அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்புகள் மூலமாகவும், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஓபிசி ஆணையத்தை அமைத்தது ஆகியவற்றின் மூலமாகவும் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட மக்களுக்கு சட்டப் பாதுகாப்புகளை பிரதமர் நரேந்திர மோடி வலுப்படுத்தியுள்ளார்.
கழிவறைகள் கட்டுதல், வீடுகள் கட்டுதல் மற்றும் வங்கிக் கணக்குகள் தொடங்குதல் போன்றவற்றின் மூலம் ஏழைகளின் வாழ்க்கையை மாற்றுவதற்கான பெரிய அளவிலான முயற்சியை அவர் முன்னெடுத்துள்ளார். இதில் பயன்பெறும் பலர் ஏழைகளிலும் மிக ஏழைகள். சமூக ரீதியாக பின் தங்கிய சமூகங்களை சேர்ந்தவர்கள். வீட்டுவசதி, சுகாதாரம், மின்சாரம், நிதித்துறை பங்கேற்பு ஆகியவற்றின் வெற்றிகள் கோடிக்கணக்கான ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிக்கின்றன.
சமீபத்தில் பெண்களின் திருமண வயதை உயர்த்தும் முடிவை பிரதமர் மோடியின் அரசு எடுத்ததாக செய்திகளில் படித்தேன். இந்த நடவடிக்கை பெண்கள், குறிப்பாக கிராமப்புறப் பெண்கள் மேற்படிப்பைத் தொடருவதற்கான சுதந்திரம் அளிக்கும். பெண்களின் முன்னேற்றத்துக்கான பிரதமரின் பணிகள் என்று கூறும்போது, இலவச கேஸ் இணைப்புகள் வழங்கும் திட்டமும், பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவது குறித்த பிரதமரின் செய்தியும் நினைவுக்கு வருகின்றன.
பெண்களுக்கு ஆதரவான முத்தலாக் தடைச்சட்டம், பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ இயக்கத்தின் மூலமாக மக்கள் தொகையில் பெண்களின் விகிதம் உயர்ந்தது ஆகியவற்றின் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார்.
அம்பேத்கர், நரேந்திர மோடி ஆகிய இரண்டு ஆளுமைகளுக்கும் இடையிலான ஆச்சரியமூட்டும் ஒற்றுமைகளையும் இந்த நூல் வெளிக்கொணர்ந்துள்ளது. இந்த இரண்டு ஆச்சரியமூட்டும் ஆளுமைகளும் சமூகரீதியில் அதிகாரமற்ற மக்கள் எதிர்கொள்ளும் சோதனைகளை வெற்றிகொண்டனர். இருவருமே வறுமையையும், ஒடுக்கும் சமூக அமைப்பையும் அருகில் இருந்து பார்த்து அவற்றை உடைத்தெறிந்தவர்கள்.
இருவருமே இந்தியாவுக்காக பெரிய கனவுகளைக் கண்டவர்கள். ஆனால் இருவருமே வெறுமனே சிந்திக்கிற வேலையை மட்டும் செய்தவர்கள் அல்ல. இருவருமே செயல்படுவதில் நம்பிக்கை கொண்ட எதார்த்தவாதிகள்” என இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜாவின் இந்த முன்னுரை வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் அவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இளையராஜா மோடியை புகழ்வதில் ஒன்றும் தவறில்லை, அது அவரது பார்வை. ஆனால் மோடி அம்பேத்கருக்கு நிகரானவர் என்று சொல்வதெல்லாம் அம்பேத்கருக்கு அசிங்கம்.அம்பேத்கர் எங்காவது பொய் சொல்லியிருக்காரா, பொய்க்கு துணை போயிருக்காரா, ஜோக்கரை போல் விதவிதமாக ஆடைகளை அணிந்து திரிந்துக் கொண்டிருந்தாரா? pic.twitter.com/NnmsHqHbeW
— SANKARRAMANI (@SankarRayan) April 14, 2022
முத்தலாக் தடை போன்ற மோடியின் நடவடிக்கையை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் ~ இசை ஞானி இளையராஜா
— 𓅯Annapoorani🇮🇳 (@Anna_poorani2) April 15, 2022
மோடி கைய வச்சா அது ராங்-ஆ போனதில்ல ☝#முத்தலாக்காவது_மயிராவது
மோடி சிறந்த நடிகர்
— SOORIYA@பகல்நிலவு (@MORNIN_sta) April 15, 2022
இளையராஜா சிறந்த பிண்ணனி இசை கலைஞர்..#பஞ்சாயத்து_முடிஞ்சுது_கிளம்புங்க
மோடி அம்பேத்கருக்கு நிகரானவர்…
— Krishna Moorthy (@Krishna77579210) April 15, 2022
~ இளையராஜா…
ஏன்யா சங்கியா நீ..!
இவ்வளவு நாளா உன்னை புத்திசாலின்னு இல்ல நெனச்சுட்டு இருந்தேன்…
😂😂😂 pic.twitter.com/WabxfLrrum
#JaiBhim அவர்களுக்கு நிகர் மோடி
— Gokul-AMMK (@Gokul_Ammk) April 14, 2022
:- இளையராஜா.#ilayaraja அவர்களே! இந்த அண்ணல் #AmbedkarJayanti நாளில் காவிகள் கூட அவரை இப்படி அவமதிக்க முடியாது.
கடும் கண்டனங்கள் 😠 pic.twitter.com/nZyy6AapY1
ராமாயண கதையில், வாலியுடன் சண்டைக்கு போனால் எதிரியின் பலத்தில் பாதி பலம் அவருக்கு போயிரும்.
— Dr Nellai – நெல்லை (@nellaiseemai) April 15, 2022
அதே மாதிரி தமிழ்நாட்டில் யாரையாவது மோடி அவர்களின் பெயரை சொல்லி மோடிக்கு எப்படியாவது பலம் சேர்க்கலாம்னு நினைத்தால், மோடியின் பெயரை சொன்னவருக்கும் அவரோட பாதி பலம் போயிரும்.
இப்போ இளையராஜா. pic.twitter.com/DmY1GoTn2D
மோடியை பார்த்து அம்பேதகர் பெருமைபடுவார் – இளையராஜா
— Sheik Mohamed Ali (@skmdali76) April 15, 2022
அரசியல் சாசனத்தை உருவாக்கியவர் அம்பேத்கர், அதை சில்லி சில்லியாக நாம் வாழும் காலத்தில் நொறுக்கிகொண்டிருப்பவர் மோடி…
இசை கடவுளுக்கு பொதுப்புத்தி தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்….@jeevasagapthan1 @RealAravind36
தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ள இளையராஜாவின் கருத்துக்கு ஒரு சில ரசிர்கள் நாங்கள் உங்கள் இசையை மதிக்கிறோம். ஆனால் உங்கள் கருத்துக்களை அல்ல என்று கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “