Advertisment

மத்திய ஏஜென்சிகளின் கண்காணிப்பில் 10 தமிழக அமைச்சர்கள்; பா.ஜ.க.,வின் தேர்தல் வியூகம் என தி.மு.க குற்றச்சாட்டு

36 தமிழக அமைச்சர்களில் மத்திய விசாரணை அமைப்புகளின் கண்காணிப்பில் 10 அமைச்சர்கள்; தமிழகத்தில் கால்பதிக்க விரும்பும் பா.ஜ.க முயற்சி என தி.மு.க குற்றச்சாட்டு; கட்சி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒப்புதல்

author-image
WebDesk
New Update
Senthil Balaji and EV Velu

தி.மு.க அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் எ.வ வேலு

Arun Janardhanan

Advertisment

36 தமிழக கேபினட் அமைச்சர்களில் குறைந்தது 10 பேர் தற்போது மத்திய ஏஜென்சிகளின் ரேடாரின் கீழ் உள்ளனர், இதனை தனது இருப்பு வரலாற்று ரீதியாக மிகக் குறைவாக இருக்கும் தமிழகத்தில் தனது செல்வாக்கை வலுப்படுத்த பா.ஜ.க மேற்கொள்ளும் முயற்சிகளாக ஆளும் தி.மு.க குற்றம்சாட்டுகிறது.

ஆங்கிலத்தில் படிக்க: 10 of its 36 ministers under watch of Central agencies, DMK sees a BJP strategy

சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகளை உள்ளடக்கிய சமீபத்திய சோதனைகள் நவம்பர் 3 அன்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவை குறிவைத்தன. தொடர்ச்சியான அழுத்தத்தின் கீழ் அவரது ஆதரவாளர்கள் கண்ணீர் விட்டு அழுததாக எ.வ.வேலு கூறினார். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்களின் விவரங்கள் வருமான வரித்துறையால் இன்னும் வெளியிடப்படவில்லை.

மத்திய விசாரணை அமைப்புகளின் ஆய்வுக்கு உள்ளான மற்ற தி.மு.க தலைவர்களில் முக்கியமானவர்கள், கோடிக்கணக்கான மதிப்புள்ள மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்; நிதி முறைகேடுகள் மற்றும் சொத்துக் குவிப்பு தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி; ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

வேலை மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜூன் மாதம் செந்தில் பாலாஜியிடம் இருந்து சமீபத்திய ரெய்டுகள் தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை அமைச்சரவையில் தக்க வைத்துக் கொண்டார், ஆனால் பல ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். நீதித்துறை நடவடிக்கைகள் பெரும்பாலும் பாதகமானதாக இருக்கின்றன. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் அதிகாரப்பூர்வமாக தலைமறைவாகிவிட்டார், இது செந்தில் பாலாஜியின் சட்ட நிலைமையை சிக்கலாக்குகிறது.

அக்டோபர் தொடக்கத்தில், தி.மு.க மூத்த தலைவரும் எம்.பி.யுமான எஸ் ஜெகத்ரக்ஷகன் வருமான வரித்துறை சோதனைகளை எதிர்கொண்டார்.

அடுத்த இலக்கு திருச்சியைச் சேர்ந்த மூத்த அமைச்சர் கே.என் நேரு; உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் ஆர்.சக்கரபாணி; மற்றும் வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி ஆகியோராக இருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்கள் மூவரும் ஏற்கனவே பல்வேறு ஊழல் புகார்கள் தொடர்பாக தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இந்த விசாரணை அமைப்புகள் தி.மு.க முதல் குடும்பத்திற்கு தங்கள் விசாரணையை விரிவுபடுத்தலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. செந்தில் பாலாஜி, ஜெகத்ரட்சகன், எ.வ.வேலு போன்ற தலைவர்கள் தி.மு.க.,வின் வளங்களை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதால் கட்சி ஏற்கனவே சூடாக உள்ளது. "இந்த நடவடிக்கைகள் ஸ்டாலினுக்கு சவாலாக இருக்கலாம், குறிப்பாக 2024 லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால்," என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

பெயர் வெளியிட விரும்பாத தி.மு.க.வின் மூத்த அமைச்சர் ஒருவர், கட்சியின் முக்கிய தலைவர்கள் பல தொகுதிகளில் செல்வாக்கு மிக்க தலைவர்களாக இருக்கின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டி, கட்சியின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கவே இந்த ரெய்டுகள் நடத்தப்படுவதாகப் பார்க்கிறோம் என்று கூறினார். உதாரணமாக, செந்தில் பாலாஜி, கரூர், பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் பெரும் செல்வாக்கைக் கொண்டுள்ளார், இந்த சோதனைகள் ஏற்கனவே கட்சியின் உள் கட்டமைப்பு மற்றும் உத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று அந்த அமைச்சர் கூறினார். "தி.மு.க.,வின் செல்வாக்கைக் குறைப்பதே நோக்கமே தவிர, தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை" என்று அமைச்சர் கூறினார்.

தமிழகத்தில் பா.ஜ.க.வின் வியூகம் இருவகையாக உள்ளது: கட்சியின் இருப்பை நிலைநிறுத்துவதைத் தவிர, மாநிலத்தில் வலுவான கோட்டையாக இருக்கும் திராவிடக் கட்சிகளின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதும் அவசியம் என்பதை பா.ஜ.க உணர்ந்துள்ளது. முன்னதாக, ஜெ.ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு மற்றும் அதன்பிறகு மறைந்ததைத் தொடர்ந்து அ.தி.மு.க பலவீனமடைந்ததை பயன்படுத்தி கட்சியை அதனுடன் கூட்டணிக்கு தள்ளியது.

திடீர் செயல்பாடுகளைக் காணும் சில வழக்குகள் பத்தாண்டுகள் பழமையானவை என்று தி.மு.க உயர்மட்டத் தலைமை சுட்டிக்காட்டுகிறது.

2024 தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க.,வின் இமேஜைக் கெடுக்கும் வகையில், தேர்தலுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலினுக்குக் கூட சம்மன் வரலாம் என்று கட்சிக்குள் சில பேச்சுக்கள் இருப்பதாக ஒரு மூத்த தி.மு.க அமைச்சர் கூறினார், இது டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நிலைமையை பிரதிபலிக்கிறது. விசாரணையில் ஈடுபட்டுள்ள ஒரு மூத்த அதிகாரி, மற்ற கட்சித் தலைவர்களிடம் விசாரணையை விரிவுபடுத்துவதற்கான திட்டம் இருப்பதை உறுதிப்படுத்தினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் காப்பாற்றப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்குகளை போட மத்திய அரசு முயற்சிப்பதாக தி.மு.க மூத்த தலைவரும் செய்தி தொடர்பாளருமான டி.கே.எஸ் இளங்கோவன் குற்றம் சாட்டினார். எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட சமீபத்திய சோதனைகளில் குற்றம்சாட்டக்கூடிய எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று டி.கே.எஸ் இளங்கோவன் கூறினார்.

மேலும், "இந்த சவால்கள் இருந்தபோதிலும், எங்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது, மேலும் இந்த செயல்கள் தி.மு.க,வின் உறுதியை வலுப்படுத்தும் என்று நம்புகிறோம்" என்றும் டி.கே.எஸ் இளங்கோவன் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Dmk Mk Stalin Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment