/tamil-ie/media/media_files/uploads/2022/12/coronavirus-disease-covid-2019-5060522__340-1.jpg)
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று (ஜன.8) திங்கட்கிழமை புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நேற்று 256 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில், சென்னை மாவட்டத்தில் 8 பேருக்கும், கோவை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா 2 பேருக்கும் என மொத்தம் 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 184 ஆக உள்ளது. இதேபோல, நேற்று தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று சற்று குறைந்து 12 ஆக பாதிப்பு பதிவாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.