ரூ.15,610.43 கோடி மதிப்பிலான தொழில் திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதன்கிழமை தெரிவித்தார்.
இந்த திட்டங்களில் மின்சார வாகன தயாரிப்பு, செல் தயாரிப்பு ஆலை, ஆட்டோமொபைல், வயர்லெஸ் தொழில்நுட்பம், ஆக்ஸிஜன் ஆலை மற்றும் ஜவுளி ஆகியவை அடங்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
இதையும் படியுங்கள்: ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி சென்னை மெட்ரோவாட்டர் போர்டல்!
இத்திட்டங்கள் தமிழகம் முழுவதும் பரவலாக செயல்படுத்தப்பட உள்ளதாகவும், கிருஷ்ணகிரி, தேனி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
தென் தமிழகத்தில் பல திட்டங்களுக்கு கணிசமான முதலீடுகளை அரசு பெற்றுள்ளது, மேலும் பலவற்றைப் பெற வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் கூறினார்.
”தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி ஆராய்ச்சி நிலையத் திட்டம் வரும்போது தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. மேலும், சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடத்தில் உள்ள தொழிற்பேட்டைகள், பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையத் திட்டம் தொடங்கப்பட்டவுடன் மேலும் முதலீடுகளைப் பெற வாய்ப்புள்ளது,” என்று அமைச்சர் கூறினார்.
முன்மொழியப்பட்ட முயற்சிகள் மூலம் 8,726 பேருக்கு வேலை வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் வழக்கமான உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி தொடங்குவதை முன்னிட்டு, புதன்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.