தமிழகத்தில் தகுதியற்ற டாக்டர் பட்டங்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி அதிர்ச்சித் தகவல்

தமிழ்நாட்டில் டாக்டர் பட்டம் பெற்றவர்களிடம் போதிய கல்வியறிவும், திறன்களும் இல்லை என்று கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இதனை கூறினார்.

தமிழ்நாட்டில் டாக்டர் பட்டம் பெற்றவர்களிடம் போதிய கல்வியறிவும், திறன்களும் இல்லை என்று கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இதனை கூறினார்.

author-image
WebDesk
New Update
TN governor RN Ravi accusations universities having only dravidian history not freedom fighters Tamil News

தமிழகத்தில் தகுதியற்ற டாக்டர் பட்டங்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி அதிர்ச்சித் தகவல்

தமிழ்நாட்டில் டாக்டர் பட்டம் பெற்றவர்களிடம் போதிய கல்வியறிவும், திறன்களும் இல்லை என்று கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார். சென்னை தியாகராய நகரில் சென்னை குடிமக்கள் மன்றம் ஏற்பாடு செய்திருந்த "போர்க்களத்திலிருந்து ராஜதந்திரம் வரை: ஆபரேஷன் சிந்தூர் புரிந்துகொள்ளுதல்" நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வருவதாக குறிப்பிட்டார். அதேநேரத்தில் தமிழ்நாட்டில் உயர்கல்வியின் தரம் குறைந்து வருவதாக ஆளுநர் ரவி சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் 20 மாநில பல்கலை. உள்ளன. ஆண்டுதோறும் சுமார் 7,000 பிஎச்.டி பட்டங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவர்களில் பெரும்பாலோர் டாக்டர் பட்டம் பெற்றவர்களிடம் எதிர்பார்க்கப்படும் கல்வியையும் திறன்களையும் கொண்டிருக்கவில்லை என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.

தேசிய கல்விக் கொள்கையின் (NEP) முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஆளுநர், அது கல்வி வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் முக்கியமானது என்றார். 2021 முதல் இந்தியாவின் பயணத்தைப் பாராட்டிய ஆளுநர் ரவி, 140 கோடி மக்களை தனது பலமாகக் கொண்டு இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை நமது வளர்ச்சியைத் துரிதப்படுத்தும். ஐ.ஐ.டி. மெட்ராஸ் மட்டும் 400 காப்புரிமைகளைப் பெற்றுள்ளது, இது இந்தியாவின் கண்டுபிடிப்புத் திறனுக்கு சான்றாகும் என்றார்.

ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசியபோது, இந்தியாவின் ராணுவ வலிமையின் ஓங்கி ஒலிக்கும் செயல்விளக்கம் என்று விவரித்தார். இது நமது வலிமையை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச சமூகம் இதைப் பாராட்டியுள்ள நிலையில், நாட்டிற்குள் உள்ள சில எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றன. போர்களில் இழப்புகள் தவிர்க்க முடியாதவை, ஆனால் நாம் சோர்வடையக்கூடாது என்று கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் மாதேஸ்வரன், ஆளுநரின் உணர்வைப் பிரதிபலித்தார். ஆபரேஷன் சிந்தூரை "மைல்கல்" என்றழைத்து, உள்நாட்டுப் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியதைப் பாராட்டினார்.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: