/tamil-ie/media/media_files/uploads/2020/06/template-2020-06-02T155711.729.jpg)
சென்னையில் உள்ள முதல்வர் பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, அங்கு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், சென்னையில் உள்ள முதல்வர் வீடு, தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து முதல்வர் வீட்டில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும், விசாரணையில், மிரட்டல் புரளி என தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடரும் மிரட்டல்கள் : தொடர்ந்து இதுமாதிரியான மிரட்டல்கள் அடிக்கடி முதல்வர் வீட்டிற்கு வருவது குறிப்பிடத்தக்கது. . வதந்தி பரப்புவோர் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வு நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.