/tamil-ie/media/media_files/uploads/2023/06/MK-Stalin_Chess-2-1.jpeg)
முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பீகார் தலைநகர் பாட்னாவுக்கு தனி விமானத்தில் செல்ல திட்டமிட்டுள்ளார்.
தேசிய அளவிலான எதிர்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க, பீகார் தலைநகர் பாட்னாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை செல்கிறார்.
2024ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், அதற்கு ஒரு வலுவான எதிரணியை உருவாக்க நாளை பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது.
நாளை நடைபெறும் தேசிய அளவிலான எதிர்கட்சிக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முதல்வர் ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேம்நாத் சோரன், உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.