ஒரே நாளில் ஸ்டாலின்- இ.பி.எஸ்: கோவையில் மாஸ் காட்டிய தலைவர்கள்

பிரச்சார வாகனத்தில் நின்றவாறு தொண்டர்களுக்கு நன்றிகளையும் வணக்கத்தையும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தவாறு சென்றார்.

பிரச்சார வாகனத்தில் நின்றவாறு தொண்டர்களுக்கு நன்றிகளையும் வணக்கத்தையும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தவாறு சென்றார்.

author-image
WebDesk
New Update
ஒரே நாளில் ஸ்டாலின்- இ.பி.எஸ்: கோவையில் மாஸ் காட்டிய தலைவர்கள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது கோவை சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, அதிமுக பிரமுகரின் இல்ல விழாவில் பங்கேற்ற கோவை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

Advertisment

கோவை மாவட்ட அதிமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயனின் இல்ல விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார். இதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு அவரது தொண்டர்கள் சுமார் 1000"க்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்பளித்தனர்.

விமான நிலைய நுழைவாயில் முதல் அவிநாசி சாலை மெயின் ரோடு வரை இரு புறங்களிலும் நின்று அதிமுகவின் கொடிகளை ஏந்தியும் வரவேற்பு பதாகைகளை ஏந்தியும் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து பிரச்சார வாகனத்தில் நின்றவாறு தொண்டர்களுக்கு நன்றிகளையும் வணக்கத்தையும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தவாறு சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சார வாகனத்தில் பயணித்தார்.

Advertisment
Advertisements

கோவை விமான நிலையத்திற்கு நேற்று வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் இன்று கோவை வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக தொண்டர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்ப்பு அளித்தது குறிப்பிடத்தகக்து.

மேலும் தமிழக முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஒரே நேரத்தில் கோவையில் முகாமிட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: