Advertisment

தென்மாவட்ட மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை – ஸ்டாலின்

தென்மாவட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை. மழை வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளுக்கு நிதி வழங்கியது தி.மு.க அரசு தான்; தூத்துக்குடியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

author-image
WebDesk
New Update
stalin thoothukudi

மழை வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளுக்கு நிதி வழங்கியது தி.மு.க அரசு தான்; தூத்துக்குடியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தென்மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தெரிவித்தார்.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் சிப்காட் தொழில் பூங்காவில் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், வியட்நாம் நிறுவனமான வின்ஃபாஸ்ட் மின்வாகன உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மு.க.ஸ்டாலின் நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின் தெரிவித்ததாவது; ”நாடாளுமன்றத்தில் கர்ஜனை மொழியாக செயல்பட்டு குரல் கொடுத்துள்ளார் கனிமொழி. வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது களத்தில் இறங்கி மக்களை காத்தவர் கனிமொழி. தூத்துக்குடியின் பெண் சிங்கமாக திகழ்கிறார் அமைச்சர் கீதா ஜீவன். தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளின் போது போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்றன. தி.மு.க. அரசு எப்போதும் மக்கள் பக்கம் நிற்கும் அரசு. பாதிப்பின் போது பார்வையிடுபவர்கள் நாங்கள் அல்ல; எப்போதும் உங்களுடன் இருப்போம். பேரிடர்களின் போது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க தேவையான திட்டங்களை தீட்டுவதுதான் திராவிட மாடல் அரசு.

நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. கொரோனா தொற்று பாதித்தப்போது, ​​குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பாக இருந்தாலும், புயல் வெள்ளமாக இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகிறோம்

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட வெள்ள பாதிப்புகளை சரி செய்ய தமிழக அரசு ரூ.666 கோடி செலவு செய்துள்ளது. நெல்லை, தூத்துக்குடியில் சீரழிந்த சாலைகள் ரூ.342 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

தென்மாவட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை. தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளுக்கு நிதி வழங்கியது தி.மு.க அரசு தான். தென்மாவட்ட மழை வெள்ளத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கியுள்ளோம். மழை வெள்ளத்தின்போது நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு இங்கே இருந்து பணிகளைச் செய்தார்.

தேர்தலின்போது மக்களைச் சந்திக்க வேண்டும் என்ற பயமே இல்லாமல் பிரதமர், மத்திய நிதியமைச்சர் செயல்படுகின்றனர். சாதுர்யமிருந்தால் சாதித்துக் கொள்ளலாம் என மத்திய நிதியமைச்சர் ஆவணமாக பதில் கூறுகிறார். பா.ஜ.க அரசின் தடைகளைத் தாண்டியே இவ்வளவு பணிகளை சாதித்துள்ளோம்.

தூத்துக்குடியில் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். தென்மாவட்டங்களுக்கு பெரிய தொழில் நிறுவனங்கள் கொண்டுவரப்படுகின்றன. தூத்துக்குடி, நெல்லையில் அமையும் புதிய ஆலைகளால் வேலை வாய்ப்புகள் உருவாகும்.” இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Central Government Thoothukudi flood relief
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment