/indian-express-tamil/media/media_files/2024/12/25/kFTzyNRFgYuvv8CW4eup.jpg)
கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (NCCR) தமிழக கடற்பகுதிகளில் நடத்திய ஆய்வில், தமிழ்நாடு கடற்கரையோரத்தில் 69 அரிப்பு மண்டல பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன, இதில் 20 இடங்களில் சீர்திருத்தம் தேவை எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
பகுதியளவு சேதமடைந்த கடல் சுவர்கள் இருப்பதால் பல பகுதிகளில் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. சென்னையில், திருவொற்றியூரில் இருந்து காசிமேடு துறைமுகம் வரையில் கவனம் தேவைப்படுகிறது. ஆலிவ் கடற்கரை, தேவனேரி, மாமல்லபுரம், செங்கல்பட்டுஆகிய இடங்களிலும் சீர்திருத்தம் தேவைப்படுகிறது.
மயிலாடுதுறையில் தரங்கம்பாடி, பூம்புகார் ஆகிய கடற்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினத்தில் அக்கரைப்பேட்டை மற்றும் வேளாங்கண்ணியில் சீர்திருத்தம் தேவை. ராமநாதபுரம் மூக்கையூர், தூத்துக்குடி, வேம்பார், திருச்செந்தூர், மணப்பாடு ஆகிய பகுதிகளில் கவனம் தேவை.
கன்னியாகுமரியில் மேல் மிடாலம், ஏனையம்புத்தன் துறை, எறையுமன்துறை, எடப்பாடி, வள்ளவிளை, மார்த்தாண்டம்துறை உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் கோட்டக்குப்பம் முதல் குறிச்சிக்குப்பம், பாண்டி மெரினா வரை சீர்திருத்தம் தேவை.
கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (CRZ) அறிவிப்பு, 2011-ன்படி கடற்கரை மேலாண்மை திட்டத்தின் (SMP) ஒரு பகுதியாக பகுப்பாய்வு செய்யப்பட்டது.
என்.சி.சி.ஆர் ஆல் தயாரிக்கப்பட்ட எஸ்.எம்.பி, ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடற்பகுதிகளில் ஆய்வு நடத்தி கணக்கெடுப்பில் ஈடுபட்டது. கடலோர புவியியல், ஆற்றின் நுழைவாயில்களின் இருப்பு, சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகள் மற்றும் கடலோர மக்களின் சமூக-பொருளாதார நிலைமைகள் உட்பட ஒரு விரிவான கடற்கரை மதிப்பீட்டிற்கு பல காரணிகள் கருதப்பட்டன.
தமிழ்நாட்டின் கிட்டத்தட்ட 13.5% கடற்கரை செயற்கை கட்டமைப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றும் அது கூறியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.