நிபா வைரஸ் அச்சுறுத்தல்: கேரளா சுற்றுலா செல்வதை தவிர்க்க கோவை கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை!

நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக கேரளாவிற்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கோவை மாவட்ட கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக கேரளாவிற்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கோவை மாவட்ட கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கோவிட் மாறுபாடு எரிஸ் பற்றிய உண்மைகள்

நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக கோவை மண்டலத்துக்குட்பட்ட கல்லூரி மாணவ மாணவிகளை கேரளாவிற்கு சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என கல்லூரி கல்விதுறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Advertisment

கேரள மாநிலம் கோழிக்கோட்டில்  14 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் பலியானார். இதனை தொடர்ந்து சிறுவனுடன் தொடர்பில் இருந்த  நபர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  இதனிடையே கேரளாவின் சில பகுதிகளில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ள நிலையில் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப் படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் தங்கள் கல்லூரி மாணவர்களை கேரளாவிற்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி அனைத்து கல்லூரிகளுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: