Advertisment

மாநகராட்சி அதிரடி... கோவையில் மாட்டு இறைச்சி விலை உயரும் அபாயம்!

கோவை மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்க தலைவர் ஜே.பி.பஷீர் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மாடு அறுவை விலையை குறைக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாநகராட்சி அதிரடி... கோவையில் மாட்டு இறைச்சி விலை உயரும் அபாயம்!

மாடு அறுவைமனையில் உயர்த்தப்பட்டுள்ள விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் மனு. அளித்துள்ளனர்.

Advertisment

கோவை சத்தி சாலையிலும் போத்தனூர் செட்டிபாளையம் பகுதியிலும் மாநகராட்சி மாடு அறுவை மனை செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த மனையில், ஒரு மாட்டிற்கு 10 ரூபாய் வசூல் செய்து வந்த நிலையில் கடந்த மாநகராட்சி கூட்டத்தில் மாடு ஒன்றிற்கு 250 ரூபாய் நிர்ணயம் செய்து மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த விலை உயர்வை கண்டித்தும் விலையை குறைக்க வலியுறுத்தியும் நேற்று ஆத்துப்பாலம் பகுதியில் மாட்டிறைச்சி வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து இன்று கோவை மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்க தலைவர் ஜே.பி.பஷீர் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மாடு அறுவை விலையை குறைக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

இந்த மனுவில், மாட்டு இறைச்சி விற்பனையை நம்பி பல குடும்பங்கள் உள்ளதால் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுகொண்டனர். இவ்விலையை குறைக்காவிட்டால் மாட்டிறைச்சியின் விலை உயர கூடும் என தெரிவித்தனர்.

மேலும் மாநகராட்சியில் இது குறித்து விலை உயர்வுக்கு முன்பே விலையை உயர்த்த வேண்டாம் என மனு அளித்த நிலையில் 25% விலையை உயர்த்திவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment