/indian-express-tamil/media/media_files/k4NRCRe3QKZ1cC2OyIKH.jpg)
கோவையில் வீட்டிற்குள் புகுந்த யானை
கோவை மதுக்கரை விநாயகர் கோயில் வீதியில் காட்டு யானை உலா வரும் செல்போன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கோவை, மதுக்கரை விநாயகர் கோயில் விதியில் நீர் பருகிய யானை நடந்து சென்ற நிலையில், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மதுக்கரை வனச்சரக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த ஒற்றைக் காட்டு யானை டிரமில் இருந்த தண்ணீரை பருகி விட்டு அங்கேயே சிறிது நேரம் நின்றது.
பின்னர் யானை மெல்ல நடந்து விநாயகர் கோயில் வீதியில் இருந்துஅடுத்து ஊருக்குள் நுழைய முற்படும்போது, விரைந்து வந்த வனத்துறை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஒற்றை காட்டு யானையை மதுக்கரையில் அடர் வனத்துக்குள் விரட்டினர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
மேலும் பொதுமக்கள் இரவு நேரத்தில், வனப்பகுதியை ஒட்டி வசிப்பவர்கள் யாரும் வெளியே வந்து உலாவ வேண்டாம் என வனதுறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.