Advertisment

தமிழகத்தில் இன்று புதிதாக 5,647 பேருக்கு கொரோனா தொற்று – 85 பேர் உயிரிழப்பு

Tamil Nadu Corona virus News Bulletin : இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 35, அரசு மருத்துவமனைகளில் 50 என மொத்தம் 85 பேர் உயிரிழந்தனர்.

author-image
WebDesk
New Update
corona cases in tamilnadu

tamil nadu daily coronavirus report

Tamil Nadu daily coronavirus report: தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 5,647  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,75,017  ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

உயிரிழப்பு விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 35, அரசு மருத்துவமனைகளில் 50 என மொத்தம் 85 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,233-ஆக  அதிகரித்துள்ளது.

 

குணமடைவோர் விகிதம்: தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 5,612-பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,19,448 ஆக அதிகரித்துள்ளது. அதாவது,கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 90.34 %   குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,336 ஆக உள்ளது. கேரளாவில், தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 49,000 க்கும் அதிகமாக  உள்ளன.மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா பிரேதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநில்கங்கள் மட்டுமே கேரளாவை விட அதிக ஆக்டிவ் நோயாளிகளை கொண்டுள்ளன.

மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை:

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,187 பேருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் – 656 , சேலம் – 296 , செங்கல்பட்டு –259, திருவள்ளூர் – 235, கடலூர் – 212, திருப்பூர் – 188, விழுப்புரம் – 161, காஞ்சிபுரம் – 148 , வேலூர் – 138, திருநெல்வேலி – 90 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 2 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 1,187 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,62,125 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10,311 ஆகும்.

இதற்கிடையே, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 85,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் தொடர்ந்து புதிய பாதிப்புகளை விட, புதிதாக குணமடைபவர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகமாக உள்ளது.

இதுவரை மொத்தம் 48.49 லட்சத்துக்கும் மேற்பட்ட கொவிட் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 93,000  நோயாளிகள் குணமடைந்துள்ளனர். 59.03 என்ற மொத்த கொரோனா பாதிப்பில் 82 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இப்போது மீண்டு வந்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment