தமிழகத்தில் மீண்டும் கொரோனா: ஒரே வாரத்தில் 2 மடங்கு உயர்வு

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு; ஒரே வாரத்தில் இரு மடங்காக உயர்வு; 32 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு; ஒரே வாரத்தில் இரு மடங்காக உயர்வு; 32 பேர் டிஸ்சார்ஜ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Covid

தமிழ்நாட்டில் மே 12-19 வரையிலான ஒரு வாரத்தில் கோவிட்-19 தொற்று பாதிப்பு எண்ணிக்கை 32-லிருந்து 66 ஆக அதிகரித்துள்ளது. மே 12-ஆம் தேதியுடன் ஒப்பிடும்போது மே 19 ஆம் தேதி கோவிட்-19 தொற்று எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 

Advertisment

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரம் தற்போதை கொரோனா தொற்று தீவிரத் தன்மை கொண்டதில்லை. லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. கவலைப்படத் தேவையில்லை என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்ட தரவுகளின்படி, ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் 34 தொற்றுகள் அதிகரித்துள்ளன. அதாவது மே 12 ஆம் தேதி 32 ஆக இருந்த கோவிட்-19 தொற்று எண்ணிக்கை மே 19 ஆம் தேதி 66 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் மே 12 முதல் 19 வரை தமிழகம் முழுவதும் மொத்தம் 32 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இந்த வாரம், கேரளாவில் அதிகபட்சமாக 95 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அந்த வகையில் மொத்தம் 69 தொற்று பாதிப்புகள் அதிகரித்துள்ளன. மகாராஷ்டிராவில், தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 12-ல் இருந்து அதிகரித்து 56 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment
Advertisements

முந்தைய வாரத்தின் 93 தொற்று பாதிப்புகளை ஒப்பிடும்போது, திங்கட்கிழமை நாடு முழுவதும் இந்த எண்ணிக்கை 164 அதிகரித்து 257 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டது. முந்தைய வாரத்தில், தமிழ்நாடு நாட்டிலேயே அதிகபட்சமாகவும், புதுச்சேரி மூன்றாவது இடத்திலும் இருந்தது. இந்த வாரம் புதுச்சேரியில் புதிய பாதிப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை, மேலும் எண்ணிக்கை 13 லிருந்து 10 ஆகக் குறைந்துள்ளது.

Tamilnadu Covid 19 Corona

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: