புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான திட்டம்: கேரளா சென்று தமிழக அரசுக் குழு ஆய்வு

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கேரள அரசின் நோர்கா திட்டம் குறித்து ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட தமிழக அரசுக் குழு திங்கள்கிழமை கேரளா சென்றடைந்தது.

author-image
WebDesk
New Update
college students cutn

புலம்பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் துறை ஆணையர் பி.கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு கேரளா சென்றது. அங்கு அவர்கள் நோர்கா திட்டத்தின் கீழ் செயல்படும் மையத்தை பார்வையிட்டனர். மேலும் இது தொடர்பாக கேரளா அரசுடன் இணைந்து செயல்படுவதற்கான  சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆய்வு செய்தனர்.  

Advertisment

குடியுரிமை பெறாத கேரள மக்கள் விவகாரத் துறையின் செயலாளர் கே.வாசுகி மற்றும் நோர்கா ரூட்ஸ் தலைமைச் செயல் அதிகாரி அஜித் கொளச்சேரி ஆகியோருடன் தமிழகக் குழுவினர் ஆலோசனை நடத்தினர். 

திட்டத்தின் மூலம் செய்யப்படும் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் அதன் மூலம் வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து விளக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்தது. 

இக்கலந்துரையாடலின் போது, ​​புலம்பெயர்ந்தோருக்கான நலத்திட்டங்களில் பரஸ்பரம் ஒத்துழைக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: