சிவகங்கை மாவட்டத்தில் அரசு திட்டங்களை வழங்க தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான திருப்புவனத்தில் மாவட்ட தி.மு.க.,வின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
/indian-express-tamil/media/post_attachments/874f152f-795.jpg)
இதையடுத்து, திருப்புவனம் அருகே உள்ள கானூர் பகுதியில் புதூர் வைகை ஆற்றுப் படுகையில் 410 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுவரும் படுகை அணையின் கட்டுமானப் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்த படுகை அணை பணிகள் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. தடுப்பணை கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோருடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
/indian-express-tamil/media/post_attachments/cab82092-e49.jpg)
பணிகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான நிலவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்த துணை முதல்வர், பணிகள் தரம் குறையாமல் விரைந்து முடிக்கப்பட வேண்டும் எனவும், அவை பொதுமக்களுக்கு பயன்படக் கோரியும் உத்தரவிட்டார்.