ரூ 33.29 கோடியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்; உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மொத்தம் 526 வீடுகள் கட்டப்படுகிறது; உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மொத்தம் 526 வீடுகள் கட்டப்படுகிறது; உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

author-image
WebDesk
New Update
Udhayanidhi Trichy camp

திருச்சி - புதுக்கோட்டை சாலை கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ரூ 33.29 கோடியில் கட்டப்பட உள்ளது. இந்த புதிய கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா இன்று (ஜனவரி 28) நடைபெற்றது.

Advertisment

திருச்சி கிழக்குத் தொகுதிக்குட்பட்ட கொட்டப்பட்டு பகுதியில் ரூ.33.29 கோடியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் புதிய கட்டுமான பணியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Advertisment
Advertisements

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வெளிநாடு வாழ் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மொத்தம் 526 வீடுகள் கட்டப்படுகிறது. நான்கு பிளாக்குகளாக 131 வீடுகள் வீதம் 524 வீடுகள் கட்டப்படுகிறது. மற்ற இரண்டு வீடுகள் தனி வீடுகளாக அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 10.167 ஏக்கரில் அனைத்து வசதிகளுடன் அமைகிறது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

க.சண்முகவடிவேல்

Udhayanidhi Stalin Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: