scorecardresearch

10 ஆண்டுகளுக்கு பின் காவலர் பொங்கல் : கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய கோவை கமிஷனர் ஆபீஸ்

பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் மக்களிடம் ஆம்னி பேருந்துகள் கட்டணம் அதிகமாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

10 ஆண்டுகளுக்கு பின் காவலர் பொங்கல் : கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய கோவை கமிஷனர் ஆபீஸ்

10 ஆண்டுகளுக்கு பிறகு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உறியடித்து, கயிறு இழுத்து பொங்கல் விழாவை போலீஸ் கமிஷனருடன் இணைந்து காவலர்கள் கொணடாடியுள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வெளியூர் சென்ற பலரும் பொங்கல் பண்டிகைக்காக தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருக்கின்றனர். இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் கடந்த பத்து ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக காவலர்கள் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடினர்.

முன்னதாக குலவையிட்டு உயர் காவல் அதிகாரிகள் வாசலில் கோலாமிட்டு  பொங்கல் பானையில் பொங்கல் வைத்து வைத்து பொங்கலோ பொங்கல் என அசத்தினர். நிறைவாக பாரம்பரிய விளையாட்டான உறியடிக்கும் நிகழ்வு, கயிறு இழுக்கும் போட்டியை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில்,

பல வருடங்களுக்கு பின் இங்கு பொங்கல் விழா கொண்டப்படுகிறது. வெளி ஊர் செல்லும் பயணிகள் நெரிசலில் சிக்கமால் செல்ல மாவட்ட நிர்வாகத்திடன் இணைந்து 300 போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்ட்டுள்ளனர். மேலும் வழிபறி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைப்கப்பட்டுள்ளது எனவும் மாநகர முழுவதும் 1500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளதாகவும்,வீடுகளில் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் விதமாக ரோந்து பணி  செல்ல அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்லும் மக்களிடம் ஆம்னி பேருந்துகள் கட்டணம் அதிகமாக வசூலித்தால்,அவர்கள் மீது புகார்கள் வரும் பட்சத்தில் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படுவதோடு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் என தெரிவித்தார்.காவலர் குடும்பங்கள் மிக மகிழ்வுடன் இந்த பொங்கலை கொண்டாடுவார்கள் எனவும் சட்ட ஒழங்கு சரியாக இருக்க வைப்பதே பொங்கலை மகிழ்சியாக்கும் என தெரிவித்தார்.

மேலும் பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் மக்களிடம் ஆம்னி பேருந்துகள் கட்டணம் அதிகமாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu festival pongal police celebrated in kovai commissioner office

Best of Express