மத்திய அரசு நியாயமாக செயல்பட வேண்டும்; நிதி பகிர்வு குறைக்கப்படுவது தொடர்பாக தங்கம் தென்னரசு பதிவு

மாநிலங்களின் பங்கை 41% இலிருந்து 40% ஆக குறைக்க நிதிக் குழு பரிந்துரைக்க வாய்ப்புள்ளது. சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு இப்படித்தான் வெகுமதி அளிக்கப்படுமா? – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

author-image
WebDesk
New Update
Minister Thangam Thanarasu has condemned the violent incident in the Neyveli protest

மாநிலங்களுக்கான நிதி பகிர்வை மேலும் ஒரு சதவீதம் குறைத்து வழங்க நிதி குழு மத்திய அரசுக்கு பரிந்துரை அளிக்க உள்ளதாக செய்தி வருகிறது. சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு இதுதான் வெகுமதியா? என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக, ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியைக் குறிப்பிட்டு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது;

தமிழ்நாடு ஏற்கனவே தகுதியான அளவை விட குறைவாகவே பெறுகிறது, இப்போது மத்திய அரசின் பரிந்துரையின்படி மாநிலங்களின் பங்கை 41% இலிருந்து 40% ஆக குறைக்க நிதிக் குழு பரிந்துரைக்க வாய்ப்புள்ளது. சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு இப்படித்தான் வெகுமதி அளிக்கப்படுமா? 

மத்திய அரசு நியாயமாகச் செயல்பட வேண்டும், 50% அதிகாரப் பகிர்வுக்கான எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம். பல மாநிலங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements
Central Government Thangam Thennarasu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: