/indian-express-tamil/media/media_files/6NgXVBeEkdZfYCusrDRP.jpeg)
அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு; புதிய அமைப்பை தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம்: மாநில- மண்டல நிர்வாகிகளை நியமனம் செய்து அறிக்கை வெளியீடு
அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பாளர்களை நியமித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார். மேலும், இந்த அமைப்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கான மாநிலத் தலைவர், மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் பதவிகளுக்கு நியமனங்கள் மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன்படி மாநிலத் தலைவராக எஸ்.எஸ்.ஆர் மருது பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில பொறுப்பாளராக ராஜகோபால், ரமணிகாந்த், கீதா லட்சுமி, விஜய் பரத், ராஜப்பா, ராம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மண்டலப் பொறுப்பாளர்கள்
சென்னை – சரவணன்
திருவள்ளூர் – ஆதி ராம் குமார்
திருச்சி – ராமச்சந்திரன்
மதுரை – நவநீதன்
சேலம் – லட்சுமணன்
கோவை – மணிகண்டன் ரவிச்சந்திரன்
வேலூர் – செண்பகராஜ்
விழுப்புரம் – துரை சேதுமாதவன்
திருநெல்வேலி – டூரிங் ஆன்றனி தனிஷ்
ஆகியோர் மண்டலப் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.