'குண்டர் சட்டத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது': ஐகோர்ட் கடும் கண்டனம்

"சாதாரணமாக குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வதை அனுமதிக்க முடியாது. யார் குண்டர்கள் என்பது குறித்து அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும்" என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai hc

"தனி நபர் சார்ந்த குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தை பயன்படுத்தக்கூடாது" ரூ.3.30 கோடி நிதி மோசடி குற்றத்திற்காக, குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குண்டாஸ் சட்டம் விதிகளை செயல்படுத்தியதற்காக, மீண்டும் மாநில அரசு மீது கடும் கண்டனத்தை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிகாரிகள் அதை சாதாரணமாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியது, மேலும் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் காவலை ரத்து செய்தது.

Advertisment

யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்த சில நாட்களுக்குப் பிறகு இந்த கடுமையான அவதானிப்புகள் வந்தன.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் நீதிபதி வி.சிவஞானம் அடங்கிய அதே அமர்வு, ஒரு நபரை ஒரு நாள் கூட சட்டவிரோதமாக காவலில் வைப்பது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியதை சுட்டிக்காட்டி, தனிநபர்களை தடுப்புக் காவலில் வைப்பது குறித்து தீவிரமாக சிந்திக்குமாறு அரசை கேட்டுக் கொண்டது.

மனுதாரர், செல்வராஜ், 3 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்றதாகவும், போலி சம்பள சீட்டு மூலம் பல வங்கிக் கணக்குகளை தொடங்கி தனது கிரெடிட் கார்டில் ரூ.33 லட்சம் பில் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

தடுப்புக் காவல் சட்டம், 1982-ன் கீழ் அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிரான அவரது மனுவை விசாரித்த அமர்வு, தனிநபர்கள் தொடர்பான குற்றங்கள் சட்டத்தின் வரம்பிற்குள் வராது, ஏனெனில் அவரது நடவடிக்கை பொது மக்களுக்கு எந்த இடையூறு அல்லது பொது ஒழுங்கை மீறவில்லை.

மோசடியான வங்கி பரிவர்த்தனைகள் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக இருக்காது, நிதி மோசடிகள் போன்ற குற்றங்களுக்காக ஒரு தனிநபருக்கு எதிராக அரசு எப்படி குண்டாஸ் சட்டத்தை செயல்படுத்தியது என்று ஆச்சரியமாக இருக்கிறது.  தடுப்புக்காவல் சட்டத்தின் விதிகளை செயல்படுத்துவது பற்றி மாநிலம் தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்று அமர்வு மேலும் கூறியது.

நீதிபதிகளின் கடுமையான கேள்விகளை எதிர்கொண்ட கூடுதல் அரசு வழக்கறிஞர் ராஜ் திலக், செல்வராஜ் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் தனிநபர்களுக்கு எதிரான தடுப்புக் காவலை சாதாரணமாக பயன்படுத்தியதற்காக அரசுக்கு எதிராக கடும் கண்டனத்தை தெரிவித்தது.

முன்னதாக சவுக்கு சங்கர் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அந்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், தடுப்புக் காவலைப் பயன்படுத்தும் ஜனநாயக அரசு நாட்டை மீண்டும் காலனித்துவ காலத்திற்கு அழைத்துச் செல்லும். பொது ஒழுங்கு அல்லது மாநிலத்தின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படாத பேச்சுக்களைத் தடுக்க தடுப்புக் காவல் சட்டங்களைப் பயன்படுத்த முடியாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: