Advertisment

58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம்; தமிழக அரசு அரசாணை

ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்வு; தமிழக அரசு அரசாணை வெளியீடு

author-image
WebDesk
New Update
teacher

ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்வு; தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் எனவும், கடந்த காலங்களில் இருந்தது போல் அதிகபட்ச வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் எனவும் ஆசிரியர் பணிக்கு பயிற்சி பெற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், சமீபத்தில் சென்னையில் நடந்த டெட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களின் உண்ணாவிரத போராட்டத்திலும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனிடையே ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு பிறகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பில், ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வயது வரம்பு உயர்வு தொடர்பான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில், ஆசிரியர் பணியில் சேர பொதுப்பிரிவினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 53 ஆகவும், இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 58 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வயது வரம்பு முன்னர் பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது 45 ஆகவும், இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயது 50 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Teacher
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment