தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: குழந்தைகளின் கல்வி முன்பணம் உயர்வு; புதிய சலுகைகள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கு உதவும் வகையில், கல்வி முன்பணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த உயர்வு 2025-26 கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கு உதவும் வகையில், கல்வி முன்பணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த உயர்வு 2025-26 கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Education

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: குழந்தைகளின் கல்வி முன்பணம் உயர்வு;

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கு உதவும் வகையில், கல்வி முன்பணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு இன்று (திங்கட்கிழமை, ஜூன் 30, 2025) அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த உயர்வு 2025-26 கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

முக்கிய அம்சங்கள்:

மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்வி படிப்புகளுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான முன்பணம் ரூ.25,000-லிருந்து ரூ.50,000-ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. குரூப் A, B, C மற்றும் D என அனைத்து பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களும் இந்த கல்வி முன்பண சலுகையைப் பெறலாம். செலுத்தப்பட்ட அல்லது செலுத்தப்பட வேண்டிய உண்மையான கல்வி கட்டணம் மற்றும் இதர செலவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முன்பணம் வழங்கப்படும். இந்த அறிவிப்பு, நடப்பு ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் நிதித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. கல்வி முன்பணம் வழங்குவதற்கான தற்போதுள்ள விதிகளில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள முக்கிய விதிகள்:

Advertisment
Advertisements

கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவர் மட்டுமே இந்த முன்பணத்தைப் பெற முடியும். இந்த கல்வி முன்பண சலுகை ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் கிடைக்கும். முந்தைய முன்பணம் நிலுவையில் இருந்தால், இரண்டாவது முன்பணம் அனுமதிக்கப்படாது. இந்த கல்வி முன்பணம் வட்டி இல்லாதது. முன்பணம் பெறப்பட்ட மாதத்திற்கு அடுத்த மாதம் முதல், 10 சம மாத தவணைகளில் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வசூலிக்கப்படும்.

இந்த கல்வி முன்பண உயர்வு, அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கும், அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Educational News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: