/tamil-ie/media/media_files/uploads/2022/10/train-india-lockdown-1.jpg)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை (Express Photo)
ராமேசுவரம்-மதுரை இடையே வாரத்தில் மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையினால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பயணிகளின் வசதிக்காக ராமேசுவரம்-மதுரை சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை வாரத்தில் மூன்று முறை இயக்கப்பட உள்ளது.
மேலும், திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த சிறப்பு கட்டண ரயில் (வ.எண்.06780) இன்று இயக்கப்படுகிறது.
குறிப்பிட்ட மூன்று நாட்களுக்கு, அதிகாலை 6.20 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு, காலை 10 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடையும்.
இந்த சிறப்பு ரயிலில், 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த சிறப்பு ரயில், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்ய, வழக்கமாக செலுத்தும் கட்டணத்தை விட 1.3 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தினமும் காலை 5.40 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு எக்ஸ்பிரஸ் பாசஞ்சர் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் 6.20 மணியளவில் புறப்படும். ஆனால், இந்த ரயிலை பயணிகளுக்கு வழக்கமான கட்டணத்தில் இயக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.