/tamil-ie/media/media_files/uploads/2022/09/FdUTwjQaIAA8E0Y.jpg)
Source: Twitter/@CMOTamilnadu
Tamil Nadu News: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் "எங்கிருந்தும் எந்தநேரத்திலும்" என்ற இணையவழி சேவையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
இதன் மூலமாக பட்டா மாறுதலுக்கான இணையவழி சேவையை மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கால விரையம் இல்லாமல் பட்டா மாறுதலுக்காக இணையவழியில் விண்ணப்பிப்பவர்கள், சிரமம் இல்லாமல் மாறுதலின் சான்றிதழை பெற்றுக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.
நகர்ப்புற வரைபடங்களை பதிவிறக்கம் செய்வதற்கான வசதியையும் இந்த இணையதளத்தின் மூலமாக மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.
இணையவழியில் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பிக்கும் மக்களுக்காக, இணையவழி மூலமாகவே விண்ணப்பத்தை சரி பார்த்து உறுதி செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து, இந்த இணையதளத்தை மக்கள் பயன்படுத்தி கூறும் கருத்துக்கு ஏற்றாற்போல இந்த வசதியை மேம்படுத்துவோம் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூறுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.