நீங்கள் வரைந்த ஓவியங்களை விற்க வேண்டுமா? கலைப்படைப்புகளை காட்சிப்படுத்த தமிழக அரசு அழைப்பு

தமிழக அரசு, ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக "ஓவியச் சந்தை" என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி, செப்.மாதத்தில் 3 நாட்களுக்கு சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும்.

தமிழக அரசு, ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக "ஓவியச் சந்தை" என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி, செப்.மாதத்தில் 3 நாட்களுக்கு சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும்.

author-image
WebDesk
New Update
tamilnadu secretariat

நீங்கள் வரைந்த ஓவியங்களை விற்க வேண்டுமா? கலைப்படைப்புகளை காட்சிப்படுத்த தமிழக அரசு அழைப்பு

சென்னை: ஓவியம் மற்றும் சிற்பக் கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், சென்னையில் 'ஓவியச் சந்தை' திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், கலைஞர்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யலாம்.

Advertisment

கலை பண்பாட்டுத்துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் இந்த சந்தை, செப்டம்பர் 2025-இல், 3 நாட்களுக்கு சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் நடைபெறும். இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள், தங்கள் படைப்புகளின் விவரங்கள், புகைப்படங்கள் மற்றும் விற்பனை விலையுடன் கூடிய விண்ணப்பங்களை செப்டம்பர் 15, 2025-க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

ஆணையர்,
கலை பண்பாட்டுத்துறை,
எண். 95, 2-வது மாடி,
டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலை,
சேத்துப்பட்டு, சென்னை-600031.

Tn Government

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: