Advertisment

சபரிமலையில் நெரிசல்; தமிழக அரசு கடிதம்

தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு தேவையான வசதி, பாதுகாப்பு, இலகுவான தரிசனம் செய்ய போதிய முன்னேற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என கேரள முதலமைச்சருக்கு மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Sabarimala temple, kerala Government, Supreme Court,

சபரிமலை தரிசனம் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் மற்றும் தலைமைச் செயலாளருக்கு மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில் இந்தாண்டு கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

Advertisment

இதனால் கூட்ட நெரிசலில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், உணவு  உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்பட வில்லை என்றும் பாதுகாப்பு இல்லை என்றும் பக்தர்கள் கூறியிருந்தனர்.

ஸ்டாலின் உத்தரவின் பேரில் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கேரள மாநில தலைமைச் செயலாளர் வி.வேணுவை தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பேசினார். 

இதற்கிடையில், “தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு தேவையான வசதி,  பாதுகாப்பு,  இலகுவான தரிசனம் செய்ய போதிய முன்னேற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என கேரள முதலமைச்சருக்கு மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Sabarimala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment