தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் - அரசு உத்தரவு

தமிழக காவல்துறையில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக காவல்துறையில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Secretariate x

இந்த இடமாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என உள்துறை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த இடமாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என உள்துறை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, மூத்த காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள புதிய பதவிகள் குறித்த விவரம் பின்வருமாறு:

டாக்டர் என்.ஸ்ரீநாத் ஐ.பி.எஸ் இவர்  சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணியாற்றி வந்த நிலையில், இவர், சென்னை பெருநகர காவல்துறை சைபர் குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜே.முத்தரசி ஐ.பி.எஸ் தென் மண்டல குற்றப்பிரிவு சிஐடி கண்காணிப்பாளராக இருந்த இவர், டாக்டர் என்.ஸ்ரீநாத் வகித்து வந்த சட்டம் ஒழுங்கு உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

கே.அதிவீரபாண்டியன் ஐ.பி.எஸ், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் காலியிடப் பிரிவு கண்காணிப்பாளராக இருக்கும் இவர், சென்னை மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Ips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: