திருச்சி டி.ஐ.ஜி வருண்குமார் சி.பி.சி.ஐ.டி -க்கு மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி சரக டிஐஜி வருண்குமார், சென்னை சிபிசிஐடி டிஐஜியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி சரக டிஐஜி வருண்குமார், சென்னை சிபிசிஐடி டிஐஜியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
ips-officers-transferred

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் உள்ளிட்ட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த நான்கு பேரில் ஒருவராக திருச்சி டிஐஜி வருண்குமாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 

Advertisment

டான்ஜெட்கோ தலைமை விழிப்புணர்வு அதிகாரியாக இருந்த டிஜிபி பிரமோத்குமார், சென்னை ஊர்க்காவல்படை டிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஊர்க்காவல் படை ஐஜி ஆக இருந்த ஜெயஸ்ரீ, மாநில குற்ற ஆவண காப்பக ஐஜி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை, குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி ஆக இருந்த ஆயுஷ்மணி திவாரி, டான்ஜெட்கோ லஞ்ச ஒழிப்பு துறை தலைமை விழிப்புணர்வு அதிகாரி ( ஏடிஜிபி) ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண் குமார், சென்னை சிபிசிஐடி டி.ஐ.ஜி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல்

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: