/indian-express-tamil/media/media_files/vf4zyjJcBKXufA7UQrgD.jpg)
Horse rides on beaches
கடற்கரை மற்றும் பிற இடங்களில் குதிரை சவாரிகளை ஒழுங்குபடுத்த வழிகாட்டுதல்களை உருவாக்க நிபுணர் குழுவை அமைக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தற்காலிக தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வுக்கு முன், தாக்கல் செய்த நிலை அறிக்கையில், மூன்று மாதங்களுக்குள் நிபுணர் குழு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வரும் என கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் தெரிவித்தார்.
மேலும் மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ. எட்வின் பிரபாகர், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், 2023 ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில், குதிரைகளுக்கு மைக்ரோசிப்பிங் மற்றும் உரிமம் வழங்குவதற்காக, அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதற்காக, சென்னையில் முகாம்களை நடத்தியதாக கூறினார்.
உழைக்கும் குதிரைகள் மட்டுமின்றி, துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பைத் தவிர்க்கும் வகையில், தெருக் குதிரைகளின் நலனுக்காக வழிகாட்டுதல்களை வகுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று விலங்கு நல உரிமை ஆர்வலர் எஸ்.முரளிதரன் தாக்கல் செய்த பொதுநல வழக்குக்கு பதிலளிக்கும் வகையில், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மாநில அரசு கொண்டு வரவுள்ள குதிரை உரிமம் வழங்கும் முறை மகிழ்ச்சி சவாரிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடாது என்று மனுதாரர் அச்சம் தெரிவித்தபோது, குதிரைகளின் ஆரோக்கியத்தை கண்காணிக்கவும், சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கவும் மட்டுமே உரிமங்கள் வழங்கப்படுவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பொதுநல மனுதாரர் அளித்த பரிந்துரைகள் இயக்குநரகத்தால் பரிசீலிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும், மேலும் வழிகாட்டுதல்களை உருவாக்கும் நோக்கத்திற்காக கூட்டப்படும் கூட்டங்களில் கலந்துகொள்ள மனுதாரரை அனுமதிக்கலாம் என்று, தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.