தமிழகத்தில் எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவற்றின் விலை ரூ. 1000 குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக கடந்த வாரம் கிரஷர் உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று டன்னுக்கு ரூ. 1000 விலையை உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் மற்றும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டவர்கள் இடையே அதிருப்தி எழுந்ததாக கூறப்பட்டது.
இந்த சூழலில், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று (ஏப்ரல் 27) ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் லாரி உரிமையாளர்கள், சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த வகையில், விலை குறைப்பு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயர்த்தப்பட்ட விலையை திரும்பப் பெற்று எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவற்றின் விலை ரூ. 1000 குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ. 33 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கை, கட்டுமானப் பொருள் சந்தையை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.