தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதைக் காட்டும் விடியோவை பாஜக தலைவர் அண்ணாமலை பகிர்ந்துள்ளார். மேலும், தமிழக கல்வி அமைச்சர் தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தமிழகத்தின் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார்.
![publive-image publive-image](https://indianexpress.com/wp-content/uploads/2022/08/anigif98765.gif)
இதுபோன்ற சம்பவங்கள் சில காலமாக நடந்து வருவதாகக் கூறிய அண்ணாமலை, இந்த சம்பவங்கள் அரசுப் பள்ளிகளில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நிலையை மோசமாக்கும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதன்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில், மாணவர்கள் சீருடையில் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த பள்ளியில் சுமார் 180 மாணவர்கள் பயின்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக கல்வித் துறை சீர்குலைந்து கிடக்கிறது என்றும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அரசுப் பள்ளிகளில் தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தாமல், தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துகிறார் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் சில காலமாக நடந்து வருவதாகக் கூறிய அண்ணாமலை, இந்த சம்பவங்கள் அரசுப் பள்ளிகளில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நிலையை மோசமாக்கும் என்றும் குறிப்பிட்டார்.
திராவிட முன்னேற்றக் கழக அரசு, அரசுப் பள்ளிகளில் பல தலைவர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள் படித்ததை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், உடனடியாக தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.