/indian-express-tamil/media/media_files/r5QvF0ypFhU6YSyG2DIj.jpg)
362 ஆயுள் தண்டனை சிறை கைதிகளை விடுதலை செய்ய, தமிழக ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். 165 பேரின் விடுதலை கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
1998-ல் கோவை குண்டு வெடிப்பில் சமந்தப்பட்ட நபர்கள் உள்பட 49 பேரின் விடுதலை கோரிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது.
ஆளுநர் மாளிகைக்கு இதுவரை கைதிகள் விடுதலை தொடர்பாக 580 பரிந்துரைகள் வந்துள்ளது. இதில் 53 நிலுவையில் உள்ளதை தவிர்த்து, மற்ற 2 கோரிக்கைகளும் இந்த ஆண்டு ஜூன் 20,, தேதியும், மற்ற பரிந்துரைகள் ஆகஸ்ட்டு 4 , 9 தேதிகளில் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது என்றும். மற்ற 49 கோரிக்கைகளும் ஆகஸ்டு 24ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு கிடைத்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் நிலுவையில் உள்ள எல்லா பரிந்துரைகளும் சமீபத்தில்தான் ஆளுநர் மாளிகைக்கு கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்த குழு முதல்கட்டமாக 264 பேரை விடுதலை செய்ய பரிந்துரை செய்தது.
20 இஸ்லாமிய கைதிகள் உட்பட, 49 பேரை விடுதலை செய்யும் கோரிக்கையை ஆளுநர் மாளிகைக்கு ஆகஸ்ட்டு 24ம் தேதி அனுப்பி வைத்ததாக முதல்வர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us