/tamil-ie/media/media_files/uploads/2023/08/RN-Ravi.jpeg)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்; அமித் ஷாவை சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளார்
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கும் ஆளுநர், முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார். குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசும் நேரம் கேட்டு உள்ளார்.
தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆளுநர் மாதாந்திர அறிக்கை கொடுப்பார் என கூறப்படுகிறது. மேலும் சில சட்ட நிபுணர்களையும் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 4 நாட்கள் டெல்லியில் தங்கி இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, வெள்ளிக்கிழமை சென்னை திரும்புவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.