Advertisment

'நடிகர் சங்க தேர்தல் செல்லாது' - ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்

ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லாததால் சங்கத்தின் குழு நடத்திய தேர்தலே செல்லாது என தெரிவித்தார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
south indian Film Artistes Association madras high court nadigar sangam - தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பின்னடைவு - தனி அதிகாரி நியமனத்தில் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

south indian Film Artistes Association madras high court nadigar sangam - தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பின்னடைவு - தனி அதிகாரி நியமனத்தில் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

சட்டப்படி நடத்தப்படாததால் நடிகர் சங்க தேர்தல் செல்லாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Advertisment

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தன்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்றும் தபால் வாக்குகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் முடிந்த நிலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இந்த தேர்தல் நடத்தப்பட்டிருப்பதால் தேர்தலை செல்லாது என அறிவிக்க கோரி நடிகர்கள் பெஞ்சமின் மற்றும் ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தனர்.

அதே போல் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 61 உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்க மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க பொது செயலாளர் என்ற முறையில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார்.

இந்த அனைத்து நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிபதி கல்யாண சுந்தரம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கடந்த ஜுன் 23 ஆம் தேதி நடந்த தேர்தலில் 80 சதவீதம் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என்றும் பதவி காலம் முடிந்தாலும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்போதைய நிர்வாகிகள் பதவியில் நீடிக்கலாம் என வாதிட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாததால் சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமிப்பது தொடர்பாக, கடந்த 5 ஆம் தேதி தமிழக அரசு, தற்போதைய நிர்வாகிகளுக்கே நோட்டீஸ் அனுப்பியதாகவும் வாதிட்டார்.

இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டிருக்காவிட்டால் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றிருப்பார்கள் எனவும் அவர் வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், உறுப்பினர்கள் புகார் குறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார்.

ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லாததால் சங்கத்தின் குழு நடத்திய தேர்தலே செல்லாது என தெரிவித்தார்.

மேலும், நடிகர் சங்க தேர்தல் நடைமுறைகளில் தமிழக அரசு தலையிடவில்லை எனவும் தெளிவுபடுத்தினார்.

இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதி வரும் 18 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment