/indian-express-tamil/media/media_files/7LtvmIk7qLptABJCe3zF.jpg)
பொங்கல் பரிசுத் தொகுப்பு; ஜனவரி 10 முதல் 13 ஆம் தேதி வரை வழங்கப்படும்; டோக்கன்கள் நாளை முதல் விநியோக்கிப்படும் – தமிழக அரசு அறிவிப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 10 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு, வேட்டி, சேலை போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜனவரி 5) அறிவித்தார். அதன்படி 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 ரேஷன் அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், ரூ.1,000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் நாளை (ஜனவரி 7 )முதல் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 9-ம் தேதி வரை டோக்கன்கள் வினியோகிக்கப்படும். இதன் பின்னர் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை மக்கள் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். மேலும் பொங்கல் தொகுப்பினை 13-ம் தேதிக்குள் பெற முடியாதவர்கள் 14-ம் தேதியன்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சர்க்கரை அட்டை மற்றும் பொருளில்லா அட்டைதாரர்களை தவிர்த்து அனைவரும் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் விதத்தில், வரும் 12ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.