Advertisment

தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு ஈஸியா போகலாம்; நவம்பர் 9 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் நவம்பர் 9 முதல் இயக்கப்படும்; போக்குவரத்துத் துறை அறிவிப்பு

author-image
WebDesk
New Update
news

தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் நவம்பர் 9 முதல் இயக்கப்படும்; போக்குவரத்துத் துறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் நவம்பர் 9 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisment

தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து, சென்னை, கோவை உள்ளிட்ட வெளியூர்களில் வேலை செய்யும் பிற மாவட்டத்தினர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர். இதனால், பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி சென்று வர சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு அறிவிக்கும். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு 28 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்தது.

அதன்படி போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் நவம்பர் 9 ஆம் தேதி முதல் இயக்கப்படும். இதில் சென்னையில் இருந்து இயக்கப்படும் 6,300 வழக்கமான பேருந்துகளுடன், கூடுதலாக 4,675 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10,975 பேருந்துகள் இயக்கப்படும். மேலும் தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்ப ஏதுவாக நவம்பர் 13 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இதற்காக சென்னையில் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், கே.கே.நகர், மாதவரம் பேருந்து நிலையம் ஆகிய ஆறு இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பெருநகர பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புதுச்சேரி, கடலூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி, திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

மேலும், மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டைக்கும், தாம்பரம் மெப்ஸ் பஸ் ஸ்டாண்டில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக தஞ்சாவூருக்கும், மற்ற ஊர்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Bus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment