பட்டா மாறுதல், ஆன்லைன் சான்றிதழ்களுக்கு இனி காத்திருக்க தேவையில்லை; தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

ஆன்லைன் சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல்களுக்கு இனி இரண்டு வாரங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியதில்லை; தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

ஆன்லைன் சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல்களுக்கு இனி இரண்டு வாரங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியதில்லை; தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

author-image
WebDesk
New Update
உங்க நிலத்திற்கான பட்டா சிட்டா ஆவணங்கள்: மொபைலில் டவுன்லோட் செய்வது எப்படி?

ஆன்லைன் சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல்களுக்கு இனி இரண்டு வாரங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியதில்லை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில் ஆன்லைன் சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல்களுக்கு விண்ணப்பிக்கும் குடிமக்கள் இனி இரண்டு வாரங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியதில்லை எனவும், நடைமுறையை விரைவுப்படுத்தி கண்காணிக்க சிறப்பு அலுவலர்களை நியமிக்கவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் பட்டா மாறுதல் மற்றும் பிற சான்றிதழ்களை பெறும் ஆன்லைன் சேவைகள் உரிய நேரத்தில் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு தாலுகாவிற்கும் துணை ஆட்சியர் அளவில் ஒரு நோடல் அதிகாரியை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மாவட்ட மற்றும் தாலுகா அளவில் ஆன்லைன் சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல்களின் முன்னேற்றத்தை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்வதற்காக, துணை ஆட்சியர் அளவில் ஒரு நோடல் அதிகாரியை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தாலுகாவிற்கு வெளியில் இருந்து துணை தாசில்தார் அல்லது உதவியாளர்கள் குழுவை கண்காணிக்க ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு துணை ஆட்சியர் நியமிக்கப்படுவார் என்று வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் எஸ்.கே. பிரபாகர் தெரிவித்துள்ளார் என டி.டி நெக்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

வருவாய் நிர்வாக ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுதிய கடிதத்தில், ”ஒரு குறிப்பிட்ட தாலுக்காவிற்கான துணை தாசில்தார் அல்லது உதவியாளர்களைக் கொண்ட மேற்கண்ட குழு, ஒதுக்கப்பட்ட தாலுகாக்களில் மின்-சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல்கள் வழங்குவதில் முன்னேற்றம் மற்றும் செயல்திறனை மதிப்பாய்வு செய்யும். சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் 16 நாட்களுக்கு மேல் நிலுவையில் வைக்கப்படாமல், சரியான நேரத்தில் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

மேலும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள சான்றிதழ்/பட்டா இடமாற்றம் வழங்கும் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும், நியாயமற்ற முறையில் முன்கூட்டியே பரிசீலிப்பது இல்லை என்பதை உறுதி செய்யுமாறும் ஆணையர் கலெக்டர்களை கேட்டுக் கொண்டார். 

தற்போதைய நிலவரப்படி, இ-மாவட்டம், தகவல் தொழில்நுட்பம், தேசிய தகவல் மையம் மற்றும் TneGA ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் 26 ஆன்லைன் சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல்கள் மாவட்ட அளவில் வழங்கப்படுகின்றன, மேலும் அவை திறமையான, வெளிப்படையான, நம்பகமான முறைகளில் கிராமங்களில் உள்ள இ-சேவை (e-Sevai) மூலம் கிடைக்கின்றன. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: