/tamil-ie/media/media_files/uploads/2023/04/online-rummy-banned.jpg)
தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “இது அரசின் கொள்கை முடிவு” என்றனர்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தன.
இந்த வழக்கு இன்று (ஆக.7) ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரமும், மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கபில் சிபல் ஆகியோர் ஆஜரானார்கள்.
தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “இது அரசின் கொள்கை முடிவு. ரம்மி விளையாட்டை நேரில் விளையாடும் போதுதான் அதை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும்.
மேலும் இந்த விளையாடுபவர்கள் தாங்கள் வென்ற முழு தொகையையும் தாங்களே எடுத்து கொள்ள முடியாது. ஒரு பகுதியை ஆன்லைன் நிறுவனங்கள் எடுத்து கொள்ளும்.
அதேநேரத்தில், நேரடியாக விளையாடும்போது முழு பணமும் கையில் கிடைக்கும்” எனத் தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை வருகிற 14ஆம தேதிக்கு ஒத்திவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.