அரசு பஸ் ஊழியர்கள் ஸ்ட்ரைக்: பொதுமக்களுக்கு இடைஞ்சல் தர வேண்டாம்- அமைச்சர் சிவசங்கர் பேட்டி

இன்னும் 2 கோரிக்கைகளை நிறைவேற்ற நாங்கள் நேரம் தான் கேட்கிறோம். நிதிச்சுமை காரணமாகவே தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியவில்லை.

இன்னும் 2 கோரிக்கைகளை நிறைவேற்ற நாங்கள் நேரம் தான் கேட்கிறோம். நிதிச்சுமை காரணமாகவே தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியவில்லை.

author-image
WebDesk
New Update
Tn Bus strike

Tamilnadu Bus strike

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப் படியை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பும்போது கருணை அடிப்படையில் நிரப்ப வேண்டும், போக்குவரத்துத் துறையில் வரவுக்கும் செலவுக்கும் இடையில் ஏற்படும் இழப்பை சரிசெய்வதற்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இதனால் தமிழகத்தில் பல இடங்களில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் 93.90%பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இன்று காலை சென்னை கோயேம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,”தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி வழக்கம்போல் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போராட்டத்தை அறிவித்த தொழிற்சங்க கூட்டமைப்பின் தொழிலாளர்களே பணிக்கு வந்து பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.

பெரும்பாலான பேருந்துகள் குறித்த நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.  தொழிற்சங்கங்கள் வைத்த கோரிக்கைகளில் 2 கோரிக்கைகள் நடைமுறையில் இருக்கிறது.

Advertisment
Advertisements

இன்னும் 2 கோரிக்கைகளை நிறைவேற்ற நாங்கள் நேரம் தான் கேட்கிறோம். நிதிச்சுமை காரணமாகவே தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியவில்லை.

அதனை கருத்தில் கொள்ள வேண்டும் என தொழிற்சங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்.

இது பொங்கல் நேரம் என்பதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க வேண்டும். சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய சூழல் உள்ளது.  இந்த நேரத்தில் போராட்டம் என்பது பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரக்கூடியது.

தொழிலாளர்களுக்கு என்றும் திமுக உறுதுணையாக இருக்கும்.  போராடுவது உங்கள் உரிமை என்றாலும் பொதுமக்களுக்கு இடைஞ்சல் தர வேண்டாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: