தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்று சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயம் தொடர்பான உத்தரவை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதில், லேசான கொரோனா தொற்று அறிகுறியுடன் சிகிச்சை பெறுவோருக்கு நாளொன்றுக்கு 5000 முதல் 7,500 வரை கட்டணம் நிர்ணயித்துள்ளது; தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு 15000 வரை கட்டணம் வசூலிக்க அரசு அனுமதியளித்துள்ளது; கிராமப்புற மருத்துவமனையில் பொது வார்டுகளில் நாள் ஒன்றுக்கு ரூ.5000 கட்டணம் நிர்ணயித்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வெளியிட்ட செய்தி குறிப்பில், "கொரோனா நோய் தொற்றுக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன. இந்திய மருத்துவச் சங்கம் தமிழ்நாடு கிலை நிர்வாகிகள் கொரோனா நோய் தொற்று கண்ட நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெரும் நோயாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் தொடர்பாக சில கோரிக்கைகளை அரசின் முன் வைத்தது.
மேலும், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டகுழு தனியார் மருத்துவமனையில் நோயாளிகளிடமிருந்து பெற அனுமதிக்கப்பட வேண்டிய தினசரி கட்டணங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்து தனது அறிக்கையினை அரசிடம் அளித்தது. இவ்வறிக்கையை கவனமுடன் ஆய்வு செய்த தமிழக அரசு, மக்கள் நலன் கருதி மேற்படி கூறிய கட்டணங்களை நிர்ணயித்துள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இக்கட்டணங்கள் அதிகபட்ச கட்டணமாகும். இக்கட்டணத்திற்கு மேலான தொகையை நோயாளிகளிடமிருந்து வசூலிக்க கூடாது" எனத் தெரிவிக்கப்ப்பட்டது.
இருப்பினும், இந்த நடவடிக்கைகள் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் அளிப்பவர்களுக்கு ஒரு தீர்வை வழங்காது. சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் டாக்டர் ஜி ஆர் ரவீந்திரநாத் கூறுகையில், இந்த நடவடிக்கைகள் ஒரு நல்ல முயற்சியாக இருந்தாலும், சிகிச்சை செலவினங்களை தமிழக அரசால் குறைக்க முடியாது. தனியார் மருத்துவமனைகளில் 80% க்கும் அதிகமான கட்டணங்கள் பெரும்பாலும் மருந்து, மருத்துவ உபகரணங்கள், ஆலோசனைக் கட்டணம் மற்றும் பிற விலையுயர்ந்த சோதனைகளின் கீழ் வசூலிக்கப்படும். அரசாங்கத்தின் கட்டுப்பாடு இந்த செலவுகளையும் நிவர்த்தி செய்திருக்க வேண்டும்… ” என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil