Advertisment

சென்னை போலீஸ் புதிய கமிஷனராக அருண் ஐ.பி.எஸ் நியமனம்: சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக டேவிட்சன் தேவாசீர்வாதம்

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்; புதிய காவல் ஆணையராக அருண் ஐ.பி.எஸ் நியமனம்

author-image
WebDesk
New Update
arun ips and davidson devasirvatham

சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் ஐ.பி.எஸ் நியமனம்; சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்

சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

தமிழக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிட மாற்ற உத்தரவை உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார்.

அதன்படி, சென்னை மாநகராட்சி காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம் செய்யப்பட்டு, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யாக இருந்த அருண் புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யாக, தலைமையிடத்து ஏ.டி.ஜி.பி.,யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி கல்லூரி டி.ஜி.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவலர் பயிற்சி கல்லூரி டி.ஜி.பி.,யாக இருந்த ராஜீவ்குமார் ஐ.பி.எஸ் தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Ips Officers Chennai Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment